உதகை மலை ரயில் சேவைக்கான "யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து விருது" 13-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்



நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாரம்பரிய மலை ரயில் கடந்த 1898-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இந்த ரயில்சேவை 1980-ல் உதகை வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த மலை ரயில் பாதையில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே ஆடர்லி, ஹில்குரோவ், ரன்னிமேடு ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. இயற்கை எழில்கொஞ்சும் மலைப்பாதை வழியாக இந்த ரயிலில் பயணிக்க பல்வேறு மாநிலத்தவரும் விரும்பி வந்துசெல்வர்.



நூற்றாண்டை கடந்த உதகை மலை ரயிலுக்கு 2005-ம் ஆண்டு ஜூலை 15ம் தேதியன்று யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து விருதினை வழங்கி கவுரவித்தது.

இன்றுடன் பாரம்பரிய அந்தஸ்து பெற்று 12-ஆண்டுகள் நிறைவுபெற்று 13-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இத்தகைய பெருமை மிக்க மலை ரயிலை நீராவியால் இயக்க பயன்படுத்தப்பட்ட இன்ஜினை காட்சிப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காட்சிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ரயில்வே அறக்கட்டளை சார்பில் 13ம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி இன்று கொண்டாடப்பட்டது. இதில், தோடர் இன மக்கள், இரயில் பயணிகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள், சிட்டிசன்ஸ் பாரம் ஆப் குன்னூர் அமைப்பின் நிர்வாகிகள் பரமேஷ்வரன், ஜெபரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...